×

ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் யாரை காக்க?

சென்னை: ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரை காக்க என கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன். இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க? இவ்வாறு டிவிட்டரில் கூறப்பட்டுள்ளது.



Tags : Parliament , Whom does Parliament protect in a billion?
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...