×

காஞ்சி-சென்னை கடற்கரை இடையே மீண்டும் ரயில்கள் இயக்க திமுக எம்எல்ஏ கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பால பணிகளில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்தும் பணிகளை விரைவாக செய்து முடிக்க கோரியும் கடந்த ஏப்.30ம் தேதி ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு ரயில்வே நிர்வாகம், செப்டம்பர் மாதத்திற்குள் பணி முடிவடையும் என குறிப்பிட்டிருந்த நிலையில் இதுவரை முழுமையாக பணி முடிவடையவில்லை.

இதையடுத்து மீண்டும் தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்துள்ளேன். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை இடையே இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்



Tags : MLA ,DMK ,beach ,Kanchi ,Chennai , DMK MLA demands resumption of trains between Kanchi-Chennai beach
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...