×

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98.57 லட்சத்தை தாண்டியது: மொத்த உயிரிழப்பு 1,43,019 ஆக உயர்வு..!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 98,57,029 ஆக அதிகரித்துள்ளது. 391 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,43,019 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,136 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 3,56,546 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 93,57,464 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 30 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98.57 லட்சத்தை தாண்டியது. மொத்த பாதிப்பு 98,57,029 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 391 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,43,019 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,57,464 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 33,136 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,56,546 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.45% சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 94.93% சதவீதமாக உயர்ந்துள்ளது.


Tags : outbreak ,Corona ,India , India, Corona
× RELATED ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை கிடு...