×

விவசாயிகள் சாலை மறியல்

திருவள்ளூர்: அரக்கோணம் தாலுகா, கேசாவரம் அணைக்கட்டிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீரானது பேரம்பாக்கத்தில் உள்ள கூவம் ஆற்றின் வழியாக கடந்த இரண்டு நாட்களாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாரிகள் கேசாவரம் அணைக்கட்டிலிருந்து பேரம்பாக்கத்திற்கு வரும் நீரை நிறுத்தினர். இதை அறிந்த பேரம்பாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிகாரியிடம் கேட்டபோது அவர்கள் அணையை திறக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், பேரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சுயம்பிரகாஷ், உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர். அப்போது எம்எல்ஏ கேட்டுக்கொண்டதன் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுவதாக உறுதியளித்தனர்.


Tags : Farmers road block
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...