×

மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் உயர் மின்கோபுர விளக்கு

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலியம்பேடு, கூடுவாஞ்சேரி ஆகிய 2 ஊராட்சிகளில் உயர் மின் கோபுர மிளக்கு இல்லாமல் அந்த பகுதி இருண்டு கிடப்பதாக ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா ரஜினி(திமுக), ஒன்றிய குழுத்தலைவர் ரவியிடம் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில், இந்த கோரிக்கையை ஏற்று இரண்டு கிராமங்களுக்கு சமூக உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம்  மதிப்பீட்டில் இரண்டு உயர் மின் கோபுர விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் லேன் மார்க் மேலாளர் கிரிதர்ராஜ் மற்றும் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் கதிரவன், சகாதேவன், ரமேஷ், ஏலியம்பேடு ஊராட்சிமன்ற தலைவர் சுகுனா சிவகுமார், துணை தலைவர் பாக்கியராஜ், கிராம சீரமைப்பு சங்க நிர்வாகிகள் வழங்கறிஞர் மதன், வஞ்சிமுத்து, அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 


Tags : High Mingopura lamp worth Rs
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...