×

சிறை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு: எஸ்பி ஆலோசனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், சிறைகாவலர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடக்க உள்ளது. இதற்காக, எஸ்ஆர்எம், வள்ளியம்மை, கற்பக வினாயகா, பெர்ரி, தாகூர், கிரசண்ட் ஆகிய கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 5,347 ஆண்கள், 785 பெண்கள், 3ம் பாலினத்தவர் 1 என 6,133 பேர் தேர்வு எழுதுகின்றனர். மையங்களில் தேர்வு எழுதுபவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து, செங்கல்பட்டு மற்றும் வட்ட போலீசாருடன் எஸ்பி கண்ணன், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி ஆடிடோரியத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

Tags : SP Consulting , Selection for Prison Guard Positions: SP Consulting
× RELATED யானை தாக்கி விவசாயி பலி