×

சிறைக் காவலரை கொன்ற 5 வாலிபர்களுக்கு குண்டாஸ்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சிறை காவலரை கொலை செய்த 5 வாலிபர்களை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். செங்கல்பட்டு அடுத்த பாலூர்  பழையசீவரம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை புழல் சிறையில் காவலராக பணியாற்றிய இன்பராசு என்பவர், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழையசீவரம் பெரிய காலனியைச் சேர்ந்த வரதராஜன் (26), ராஜதுரை (25), செந்தில்குமார் (30), விக்னேஷ் (23), ஜான்சன் (28) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 5 பேர் மீது, ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட  பல்வேறு வழக்குகள் பல காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு எஸ்பி கண்ணன்,  கலெக்டர் ஜான்லூயிசுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags : teenagers ,prison guard , Kundas for 5 teenagers who killed a prison guard
× RELATED இன்ஸ்டாவில் இருந்து புகைப்படங்களை...