×

பெரியகுளத்துப்பாளையம் அருகே அவல நிலை: டிரான்ஸ்பார்மரை சுற்றி செடி கொடிகள் வளர்ந்து பாதிப்பு

கரூர்: கரூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் இருந்து குகைவழிப்பாதை செல்லும் பகுதியோரம் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் அதிகளவு செடிகொடிகள் வளர்ந்துள்ளன. மேலும் டிரான்ஸ்பார்மரின் மேற்புற பகுதிகளிலும் மரங்கள் வளர்ந்து இடையூறாக உள்ளது. இதனால், மின்தடை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது. எனவே, டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் உள்ள முட்புதர்களை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Periyakulathupalayam ,transformer , Tragedy near Periyakulathupalayam: Impact of vines growing around the transformer
× RELATED தென்மேல்பாக்கம் கிராமத்தில் எலும்பு...