கோவை: துப்புரவு பணியாளர்களிடம் தீண்டாமை கடைபிடித்த புகாரில் பதிலளிக்க கோவை மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 325 புதிய ஊழியர்கள் பணி செய்யாதது பற்றியும் ஆணையர் பதில்தர தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை வழங்கறிஞர் பன்னீர்செல்வம் தந்த புகாரின் பேரில் மாநகராட்சி ஆணையர் 15 நாளில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.