சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அடையாறு, திருவான்மியூர், மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை நடத்திவருகின்றனர். முகக்கவசம், தலைக்கவசம், சீட்பெல்ட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்துவருகின்றனர்.