×

ராமதாஸ் வலியுறுத்தல் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டை அடுத்தடுத்து தாக்கிய நிவர் மற்றும் புரெவி புயல்கள் கும்மிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி வரை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த புயலால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்களில் முதன்மையானவர்கள் உழவர்கள் தான். தொடர்மழை ஓய்ந்து விட்ட நிலையில் கடந்த சில நாட்களாக நெல் மூட்டைகள் முளைக்கத் தொடங்கியிருக்கின்றன. டெல்டா மாவட்டங்களில் 30 ஆயிரத்திற்கும் கூடுதலான மூட்டை நெல் முளைத்துவிட்டதாக கூறப்படுகிறது. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே நிலையே காணப்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் முளைத்துவிட்டன. முளைவிட்டு சேதமடைந்த நெல்லை கணக்கிட்டு அதற்கு இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். அதேபோல், காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் முழுமையான இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Ramadas ,storm ,Nivar , Ramadas insists relief for farmers affected by Nivar storm
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...