கிரீன் கலாம் அமைப்பின் நிறுவனர் மற்றும் திரைப்பட நடிகர் விவேக், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர் மரங்களை நட்டு எஸ்.பி.பி. வனத்தை துவக்கி வைத்தனர். இதில், எஸ்.பி.பி.யின் 74 வயதை நினைவு கூறும் வகையில், ரோஸ்வுட், செஞ்சந்தனம், வேம்பு, சில்வர் ஓக், வேங்கை,தேக்கு, பண்ருட்டி பலா, சந்தன மரம், மா மரம் என இசை கருவிகள் தயாரிக்கபடும் 74 வகையான மரங்கள் இசை குறியீடு வடிவத்தில் நடப்பட்டது.