சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தங்கியிருந்த ஓட்டல் அறையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நடிகை சித்ரா பயன்படுத்திய காரையும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். செம்பரம்பாக்கம் அருகே பாப்பான்சத்திரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தபோது சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.