×

இறுதி மூச்சு வரை சமூக சேவையில் தன்னை அர்பணித்துக் கொண்டவர் கோவை சுப்பிரமணியன் : முதல்வர் பழனிசாமி இரங்கல்!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் குறைந்த விலையில் மதிய சாப்பாடு வழங்கி வந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனருமான திரு. சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (11.12.2020) உடல் நலக் குறைவால் காலமானார்  என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

திரு. சுப்பிரமணியன் அவர்கள் கோவை பகுதியிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு  குறைந்த விலையில் உணவு, மருத்துவம்,   உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த பெருமைக்குரியவர். திரு. சுப்பிரமணியன் அவர்கள் தனது இறுதி மூச்சு வரை சமூக சேவையில் தன்னை அர்பணித்துக் கொண்டவர் என்ற சிறப்புக்குரியவர்.

திரு. சுப்பிரமணியன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாகப் பெற்று வந்த கோவை பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.  



Tags : Kovai Subramanian ,Palanisamy , Chief Palanisamy, condolences
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...