சென்னை: கோவை மாவட்டத்தில் குறைந்த விலையில் மதிய சாப்பாடு வழங்கி வந்த சுப்பிரமணியன் மறைவுக்கு ஓ.பி.எஸ். இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக நலப்பணிகளில் தன்னை அர்பணித்துக் கொண்ட சுப்பிரமணியன் மறைவு கோவை மக்களுக்கு பேரிழப்பு என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். மனிதநேயத்துடன் செய்யும் சேவை, இறைவனுக்கே செய்யும் சேவை என சுப்பிரமணியனுக்கு ஓ.பி.எஸ். புகழாரம் சூட்டியுள்ளார்.