×

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல்: குலுக்கல் முறையில் அ.தி.மு.க. வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றார். குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு தலா 8 வாக்குகள் கிடைத்து தேர்தல் சமநிலையில் முடிந்ததால் குலுக்கல் முறை கையாளப்பட்டது. இன்று மதியம் 3 மணிக்கு நடக்கும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Tags : Panchayat ,Sivagangai District ,President ,Election ,Ponmani Bhaskar ,AIADMK , Sivagangai District Panchayat President Election, AIADMK Candidate Ponmani Bhaskar, won
× RELATED திருச்சியில் ரூ.1 கோடி பறிமுதல் செய்த...