சென்னை: ஏழை மக்களின் வாழ்வாதாரம் கருதி உடனடியாக சென்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தெற்கு ரயில்வேக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 100 சதவீதம் பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புறநகர் ரயில் சேவையை மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்த பின்னரும் முழுமையாக தொடங்கப்படாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.