×

இத்தாலி கால்பந்து வீரர் மரணம்

இத்தாலி  கால்பந்து அணிக்காக விளையாடியவர் பவுலோ ரோஸ்ஸி(64). இத்தாலி அணி 1982ம்  ஆண்டு உலக கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர். அந்தப் போட்டியில் 6 கோல்கள்  அடித்து, அதிக கோல்கள் அடித்ததற்கான  ‘தங்க  காலணி’ வென்றவர்.  இத்தாலி  அணிக்காக  48 போட்டிகளில் விளையாடி 20 கோல்கள் அடித்துள்ளார். ஜூவென்டஸ், மிலன் உட்பட பிரபல கால்பந்து கிளப்களுக்காக  விளையாடி உள்ளார்.  நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்த  பவுலோவுக்கு என்ன நோய் என்று  அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பவுலோ மரணத்ததை அவரது மனைவி பெடெர்சியா  உறுதிப் படுத்தினார். சமூக ஊடகமொன்றில், ‘எப்போதும் இதயத்தால்  தொடருவேன். எல்லா வகையிலும்  உன்னைப் போல்  ஒருவருமில்லை. உனக்கு பிறகு   ஒன்றுமேயில்லை’ என்று தெரிவித்துள்ளார். பவுலோ மரணத்திற்கு  பிபா, இத்தாலி  கால்பந்து கூட்டமைப்பு உட்பட பல்வேறு தரப்பு இரங்கல் தெரிவித்து வருகிறது.

Tags : Italy ,footballer , Italy footballer dies
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்