இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த பார்த்தீவ் படேல் அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.் இந்நிலையில் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அழைப்பு விடுத்துள்ளது. மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானியின் அழைப்பை படேல் ஏற்றுக் கொண்டுள்ளார். மும்பை அணிக்கான திறமையான வீரர்களை கண்டறியும் பணியை படேல் செய்ய உள்ளார். படேல் மும்பை அணிக்காக 2015 முதல் 2017ம் வரை 3 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அதில் 2 முறை மும்பை கோப்பையை வென்றது.