சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயத்தை போக்கும் பயணமாக முதல்வரின் சுற்றுப்பயணம் அமைந்தது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 2.22 லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்த உடன் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.