மதுரை: வேகத்தடுப்பில் ஏன் தனி நபர்களின் விளம்பரம் செய்யப்படுகிறது? என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். எத்தனை கிலோமீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு உள்ளது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலை துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர் பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.