×

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையே; கன்னத்தில் இருந்த நகக் கீறல் சித்ராவின் நகக்கீறலே; பிரேத பரிசோதனையில் உறுதி

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் அவரது பெற்றோர்களிம் ஒப்படைக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் உடல் ஒப்படைக்கப்பட்டது. சித்ராவின் உடல் இறுதி சடங்கிற்காக கோட்டூர்புரம் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் நடிகை சித்ராவின் உடலுக்கு நடிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகை சித்ராவின் இறுதிச்சடங்கு நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் சினிமா பிரபலங்கள் உள்பட அவர்களது உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை 10 மணியளவில் நடிகை சித்ராவின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல்கூராய்வு நடைபெற்றது. சுமார் 1.30 மணி நேரத்திற்கு மேலாக பிரேத பரிசோதனை நடைபெற்றது.   

பிரேத பரிசோதனை முடிவு:

நடிகை சித்ரா தான் தற்கொலை செய்தது உடல் கூராய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னத்தில் இருந்த நகக் கீறல் சித்ராவின் நகக்கீறல் என்றும் முதற்கட்ட பரிசோதனையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக குடும்பத்தினர், உறவினர் குற்றம்சாட்டிருந்தனர். சித்ராவின் கணவர் ஹேம்நாத் தான் கொலை செய்ததாக சித்ராவின் தாயார் குற்றம்சாட்டிருந்தார்.

2-வது நாளாக விசாரணை:

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விடுதியின் மேலாளர் உள்பட 3 பேரிடம் நசரத்பேட்டை காவல்துறையினர் இன்று காலை விசாரணை நடத்தினர். சித்ராவின் கணவரிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தற்போது தற்கொலை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், போலீசார் தற்கொலைக்கு யார் காரணம் குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளனர்.


Tags : suicide ,Chitra ,autopsy , Actress Chitra, death, suicide, nail scratch Chitra's, nail scratch
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?