×

பாஜ கட்சிக்குள் எதிர்ப்பு அதிகரிப்பு... முதல்வராக இருக்க வேண்டுமா? வேண்டாமா? டிச. 13ல் திரிபுரா முதல்வர் ‘தர்ம யுத்தம்’

அகர்தலா, :திரிபுரா பாஜகவுக்குள் எதிர்ப்பு அதிகரிப்பால் திரிபுரா முதல்வர் பிப்லாப் வரும் 13ம் தேதி விவேகானந்தர் மைதானத்தில் தர்ம யுத்தம் செய்ய உள்ளார்.திரிபுராவில் முதல்வர் பிப்லாப் டெப் தலைமையிலானா பாஜக - ஐபிஎஃப்டி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், ஆட்சி நிர்வாகத்தில் அதிருப்தி தெரிவித்த பாஜக எம்எல்ஏக்கள் சிலர் கடந்த அக்டோபரில் கட்சியின் தேசிய தலைவர்  ஜே.பி.நட்டாவை சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்தனர். இந்நிலையில், பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய செயலாளரும், திரிபுராவின் மத்திய மேற்பார்வையாளருமான வினோத் குமார் சோங்கர், மாநிலத்திற்கு சென்றார்.

அவரது வருகையின் போது, முதல்வர் ​பிப்லாப்புக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் மாநில பாஜகவுக்குள் புகைச்சல் அதிகரித்துள்ளது. இதற்கிடையே முதல்வர் பிப்லாப், நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘வரும் 13ம் தேதி விவேகானந்தர் மைதானத்திற்குச் செல்கிறேன். நான் திரிபுரா மாநில முதலமைச்சராக இருக்க வேண்டுமா? இல்லையா? என்று மக்களிடம் கேட்கிறேன். பொதுமக்கள் என்னை ஆதரிக்கவில்லை என்றால், இதுகுறித்து கட்சியின் தலைமைக்கு தெரிவிப்பேன். எனவே, பொதுமக்களின் முடிவுக்கு காத்திருக்கிறேன். பொதுமக்களின் முடிவே எனக்கு இறுதியானது. திரிபுரா பொறுப்பாளர் வினோத் சோங்கர், மாநிலத்தில் ஆட்சி நன்றாக இருப்பதாக என்னிடம் கூறினார். திரிபுரா மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். ஏதேனும் பிரச்சினை இருந்தால், கட்சித் தலைமை அதைக் கவனிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.  
முதல்வர் பிப்லாப்புக்கு எதிராக கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் வரும் 13ம் தேதி விவேகானந்தர் மைதானத்திற்கு சென்று ‘தர்ம யுத்தம்’ தொடங்க உள்ளதால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : first ,BJP ,Tripura ,Chief Minister , BJP, Opposition, Increase, Muthal, Tripura, Dharma War
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...