×

எனது மகள் சித்ரா தைரியமானவர், அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை: தாயார் விஜயா கண்ணீர் மல்க பேட்டி

சென்னை: ஹேம்நாத் தனது மகளை கொலை செய்துவிட்டார், அவளை கைது செய்ய வேண்டும் என நடிகை சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். எனது மகள் சித்ரா தைரியமானவர், அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை என அவரது தயார் விஜயா கூறினார். சித்ராவை திருமணம் செய்து தரவிட்டால் நான் செத்துவிடுவேன் என ஹேம்நாத் கூறியதாகவும் கூறினார். ஹேம்நாத் நல்லவர் என ஏமாந்துவிட்டோம் என சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். சின்னத்திரை நடிகை சித்திராவின் உடல் பிரேத பரிசோதனை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் நடந்து வருகிறது.

கொலையா? தற்கொலையா?: 2-வது நாளாக விசாரணை

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விடுதியின் மேலாளர் உள்பட 3 பேரிடம் நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவரிடம் இரண்டாவது நாளாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ரா தற்கொலை செய்து கொண்ட விடுதியில் சிசிடிவி காட்சிகள் சரிவர இயங்காத நிலையில் 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ரா தற்கொலை செய்து கொண்ட விடுதி, முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்லராஜூக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Chitra ,Vijaya Kannir Malka ,interview , Daughter Chitra, brave, she committed suicide, no chance, ready Vijaya
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...