×

சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டியது படகு குழாம்

செய்யூர்: செய்யூர் அடுத்த முதலியார் குப்பம் பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு உட்பட்ட படகு குழாம் அமைந்துள்ளது. இங்கு தினமும் சென்னை புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து, பல்வேறு படகுகளில் ஏறி சவாரி சென்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவர். இந்நிலையில், தமிழகத்தில் மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, இந்த படகு குழாம் உட்பட சுற்றுலா தலங்களை மூடியது. சுமார், 8 மாதங்களுக்கு பிறகு, இந்த படகு குழாம் நவம்பர் 1ம் தேதி பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. ஆனால், சமீபத்தில் உருவான புயல் மற்றும் கனமழையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாமல் இருந்தது. மழை குறைந்ததால் நேற்று முதல் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை துவங்கியது. இதன் காரணமாக இங்கு கொரோனா தொற்று  தடுப்பு பணிகளை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர்.

Tags : boat crew ,arrival , The boat crew weeded out by the arrival of tourists
× RELATED புதன்சந்தைக்கு மாடுகள் வரத்து சரிவு