×

கிணற்றுக்குள் கார் விழுந்து 6 பேர் பலி... உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!!

சதர்பூர், :மத்திய பிரதேச மாநிலம் சதர்பூர் மாவட்டம் மகாராஜ்பூர் காவல்  நிலையப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் திருமண விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக சிலர் காரில் வந்தனர். விருந்தினர்களின் கார் ஒன்று சாலையோரத்தில்  நிறுத்தப்பட்டிருந்தபோது, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால், அப்பகுதியில் இருந்த கிணற்றின் ஓரமாக நிறுத்தப்பட்டது.

இருந்தும் கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், காரை பின்னோக்கி ஓட்டிச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று கிணற்றுக்குள் விழுந்தது. தகவலறிந்த உள்ளூர்வாசிகள் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர். இந்த விபத்தில் காருக்குள் இருந்த 6 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் சத்ரபால் சிங் (40), ராஜு குஷ்வாஹா (37), ராம்ரதன் அஹிர்வார் (37), கன்ஷ்யம் அஹிர்வார் (55), குல்தீப் அஹிர்வார் (22), ராம்தீன் அஹிர்வார் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் மூன்று  பேர் மீட்புக் குழுவினரால் காப்பாற்றப்பட்டனர். இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்பட்டுத்தி உள்ளது. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Yogi Adityanath ,victims ,families , Well, sacrifice, chief, Yogi Adityanath, order
× RELATED லக்னோ மக்களவைத் தொகுதியில்...