காஞ்சிபுரம்: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அத்திவரதர் கோவிலில் உள்ள குளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் தலங்களில் உலகப் புகழ் பெற்ற வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது அத்திவரதர் திருவிழா. இந்த திருவிழா 48 நாட்கள் நடைபெறும். இந்த அத்திவரதர் திருவிழா கடந்த 1019-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை நடைபெற்றது. நீராவி மண்டலத்தில் உள்ள அத்திவரத்தரை வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த அத்திவரதர் குளத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக குளத்தில் தண்ணீர் முழுமையாக நிரம்பியுள்ளது. இதனிடையே குலத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.