×

நடிகர் ரஜினிகாந்த், புதிய கட்சிப் பணிகள் குறித்து சென்னை கோடம்பாக்கத்தில் மன்ற நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கம் அருகே உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.  தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி மற்றும் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியலுக்கு வருவதாக கடந்த 2017ல் கூறிய ரஜினி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். வரும் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மேலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார். தொடர்ந்து, நேற்று பெங்களூருவில் தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ஆசி பெற்றார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று  கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புதிதாக தொடங்கவிருக்கும் கட்சிப் பணிகள் குறித்து அவர் ஆலோசித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rajinikanth ,re-consults ,councilors ,Kodambakkam ,Chennai , Actor Rajinikanth, New Party, Advice
× RELATED குழந்தைகள் மருந்தில் கலப்படம்...