×

மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் இறந்தவர் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம்

தா.பழூர்: தா.பழூர் அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், இறந்தவர் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் நைனார் ஏரி உள்ளது. 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு அருகே உள்ள மயானத்திற்கு செல்ல தனிப்பாதை கிடையாது. ஏரியின் கரையில் தான் மயான கொட்டகைக்கு செல்ல வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் இறப்பவர்களை மயானத்திற்கு கொண்டு செல்ல மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் உடலை ஏரியின் கழுத்தளவு தண்ணீரில் பாடைகளை சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. தண்ணீர் அதிகம் இருந்தால் நீந்திக் கொண்டு பாடைகளை சுமந்து செல்லும் அவலமும் நீலையும் அவ்வப்போது தொடர்கிறது.

இந்நிலையில் கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த சொக்கர் என்கிற ராமலிங்கம் வயது முதிர்ச்சியின் காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய நைனார் ஏரியை கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது ஏரியில் இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து ராமலிங்கத்தை சடலத்தை அடக்கம் செய்ய தூக்கி சென்றனர்.

இதேநிலைதான் ஒவ்வொரு வருடமும் மழைகாலங்களில் நடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மயானத்திற்கு செல்ல தனிப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : deceased ,cemetery , Grave path
× RELATED மூலக்கொத்தளம் மயானத்தில் ரூ.1.4...