×

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் பார்திவ் பட்டேல் அறிவிப்பு..!

மும்பை: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து  ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் பார்திவ் பட்டேல் அறிவித்துள்ளார். இந்திய அணி கிரிக்கெட் வீரரான பார்திவ் பட்டேல், இடது கை பேட்ஸ்மேன் ஆவார். இவர் 1985ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி அகமதாபாத்தில் பிறந்தார். இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான தேடுதல் வேட்டை 90களின் பின் பகுதியில் இருந்தே தொடங்கியது. யாரும் சரியாக அமையாத நிலையில் ராகுல் டிராவிட் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விக்கெட் கீப்பிங் செய்து வந்தார்.

டெஸ்ட் போட்டிகளுக்கு வேறு விக்கெட் கீப்பரை தேட வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அப்போது 17 வயதே ஆன பார்த்திவ் பட்டேல் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அவரால் சிறப்பாக ரன் குவிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.இதனையடுத்து, பார்த்திவ் பட்டேல் 2008, 2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில் மீண்டும் இந்திய அணியில் சில போட்டிகளில் ஆடினார். ஆனால், அப்போதும் அவர் தன் பேட்டிங் பார்மை நிரூபிக்கவில்லை. அதனால், அவருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து  ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் பார்திவ் பட்டேல் அறிவித்துள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து  ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை அவர் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 934 ரன்கள் எடுத்துள்ள நிலையில் 38 ஒருநாள் போட்டியில் விளையாடி 736 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் இதுவரை அதிகபட்சமாக 95 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

Tags : Parthiv Patel ,retirement ,Indian , Cricket, Indian player, Parthiv Patel, retired
× RELATED தினமும் ஈடுபட்டு வரும் ஊழியர்கள்...