×

முன்விரோதம் காரணமா?: வேலூர் அருகே சிறை வார்டன் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை..போலீசார் விசாரணை..!!

வேலூர்: வேலூர் அருகே ஊசூரில் சிறை வார்டன் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த புலிமேடு பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் வெட்டிக்கொள்ளப்பட்டார். இவரது நண்பர் காமேஷ்,  புழல் சிறையில் வார்டனாக உள்ள தணிகைவேல் மற்றும் சுதாகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து நண்பரை கொலை செய்த்தவர்களை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று திட்டம் திட்டியுள்ளனர். இந்த தகவல் ஏற்கனவே கொலை செய்த கும்பலுக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று மூவரும் புலிமேடு அருகே மது அருந்திக்கொண்டிருந்த போது காரில் வந்த மர்மநபர்கள் புழல் சிறையில் வார்டனாக உள்ள தணிகைவேல் மற்றும் சுதாகர் ஆகியோரை சம்பவ இடத்திலேயே வெட்டி படுகொலை செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற காமேஷ் என்பவரையும் விரட்டி சென்று படுகொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகொலை செய்யப்பட்ட உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் கொலையில் சம்பந்தப்பட்ட 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக தான் கொலை நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுபோன்ற படுகொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. இந்த கொலை சம்பவத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தாலொழிய இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.


Tags : jail warden ,Vellore ,police investigation , Animosity, Vellore, Prison Warden, Massacre
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...