சென்னை: சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வரும் 16ம்தேதி சென்னையில் நடக்க இருந்த சமக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமக தலைவர் சரத்குமாருக்கு ஐதராபாத்தில் எந்தவித அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்தும் விரைவில் மீண்டு வருவார். தற்போதைய சூழ்நிலை காரணமாக வரும் 13ம்தேதி சரத்குமார் செல்லவிருந்த தென்காசி, தூத்துக்குடி பயணமும், சென்னையில் 16ம்தேதி நடைபெறவிருந்த உயர்மட்ட மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது. வீண் வதந்திகளை நம்பி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.