×

தெருக்களில் கழிவுநீர் தேக்கம் பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பூர்: புளியந்தோப்பு பிரகாஷ் ராவ் காலனி மற்றும் டிக்காஸ்டர் ரோடு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து பொதுமக்கள்  அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை அகற்ற கோரி, பலமுறை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று புளியந்தோப்பு நெடுஞ்சாலை  மற்றும் டிக்காஸ்டர் சாலை ஆகிய பகுதிகளில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீஸ் உதவி கமிஷனர் பிரகாஷ் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீர் வாரிய  அதிகாரிகளை நேரில் வரவழைத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Tags : streets ,blockade ,road , Sewage stagnation in the streets Public road blockade
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...