×

சட்டீஸ்கரில் 15 வயது சிறுமிக்கு 15 நாளாக பாலியல் வன்கொடுமை; 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

ராய்ப்பூர், :சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் ராஜ்பூர் காவல் நிலையத்தில் கடந்த நவ. 30ம் தேதி தங்களது 15 வயது மகளை காணவில்லை எனக் கூறி சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில் கடந்த நவ. 20ம் தேதி பல்ராம்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள அம்பிகாபூருக்கு சிறுமி சென்றுள்ளார்.  அங்கு சிறுமிக்கு தெரிந்தவரான சித்தாந்த் சாகர் (22) என்பவரை சந்தித்துள்ளார்.

சாகர் சிறுமியை அழைத்து கொண்டு காந்தி நகரில் உள்ள தனது நண்பன் அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.  சாகரின் நண்பர்களான ஆலம் சாய் (22), வினய் திர்க்கி (22) மற்றும் சுரேந்திரா மின்ஜ் (20) ஆகியோர் மற்றும் 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கிட்டதிட்ட 15 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன்பின்னர் சிறுமியை விடுவித்துள்ளனர். இதனையடுத்து எஸ்பி சாஹூ தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சாகர் மற்றும் அவரது 3 நண்பர்களை ஞாயிற்று கிழமை கைது செய்தனர்.  திங்கட்கிழமை 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.  தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags : Chhattisgarh ,boys , Chhattisgarh, girl, sex, abuse, boys, arrested
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...