×

புற்றுநோயால் மூத்த மகன் இறந்த விரக்தி 2 மகன்களை கொன்று தம்பதி தற்கொலை

சேலம்: சேலம் அம்மாபேட்டை வாய்க்கால்பட்டறை வால்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (38). இவர் பிரபலமான சலூன் கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கோகிலா (35). இவர்களுக்கு மதன்குமார் (17), வசந்தகுமார் (14), கார்த்திக் (10) என 3 மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதத்திற்கு முன் ரத்த புற்றுநோயால் இறந்து விட்டார். வசந்தகுமார் அரசு பள்ளியில் 10ம் வகுப்பும், கார்த்திக் 7ம் வகுப்பும் படித்து வந்தனர். மதன்குமார் உயிரிழந்ததில் இருந்தே குடும்பத்தினர் கடும் சோகத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டீயில் விஷம் கலந்துகொடுத்து 2 மகன்களையும் கொலை செய்த தம்பதி, பின்னர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தபோது, மகன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து இறந்திருக்கலாம்  என்று தெரியவந்தது.


Tags : death ,sons ,suicide , Frustration over death of eldest son due to cancer Couple commits suicide by killing 2 sons
× RELATED போரும் பெண்களும்!