புதுடெல்லி: கோவாவில் உள்ள கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலில் இருந்து கடந்த 26ம் தேதி மிக் 29கே ரக பயிற்சி விமானம் புறப்பட்டுச்சென்றது. இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர். திடீரென கட்டுப்பாட்டை இழந்த பயிற்சி விமானம் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு விமானியான நிஷாந்த் சிங் மாயமானார். இதனை தொடர்ந்து விமானியை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் மாயமான விமானி நிஷாந்த் சிங்கின் சடலம் 11 நாட்களுக்கு பிறகு நேற்று மீட்கப்பட்டது.