×

அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்த பாலிவுட் நடிகைக்கு கொலை மிரட்டல்: ஐதராபாத் மாணவி கைது

மும்பை: அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்ததாக கூறி பாலிவுட் நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த ஐதராபாத் மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் மூத்த நடிகை சல்மா ஆகாவின் மகளும், நடிகையும், பாடகியுமான ஜாரா கான், அவுரங்கசீப் மற்றும் தேசி கட்டே போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்திற்கு கடந்த நவ. 6ம் தேதி பெண் ஒருவர் கொலை மிரட்டல் மற்றும் ஆபாச செய்திகளை அனுப்பி உள்ளார். இதுெதாடர்பாக ஜாரா கான், சம்பந்தப்பட்ட பெண் மீது மும்பையில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார்க கொலை மிரட்டல் விடுத்த தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி மாணவியை (23) கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ஒஷிவாரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தயானந்த் பங்கர் கூறுகையில், ‘நடிகை சல்மா ஆகாவின் மகள் ஜாரா கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு பெண் ஒருவர் ஆபாச செய்திகளை அனுப்பியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் கூறினார். மேலும், மிரட்டல் விடுத்த பெண் குறித்த விபரங்களை இன்ஸ்டாகிராம் சமூக வலைதள நிறுவனத்திடம் கேட்டோம். அவர்கள் அளித்த விபரங்கள் மற்றும் போலீஸ் விசாரணையில் நூரா சரவர் என்ற பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மிரட்டல் விடுத்த பெண் ஐதராபாத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி என்பது தெரியவந்தது.

புகார் அளித்த ஜாரா கான் மற்றும் அவரது சக ஊழியர்கள், குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் இணைந்து செயல்படுவதாகவும், அதனால் அவரை குறிவைத்து மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டப்பட்ட பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பிேனாம். ஆனால், நோட்டீஸ் கொடுத்த அதிகாரியிடம் அந்த பெண் சரியாக பதிலளிக்கவில்லை. நேரில் ஆஜராகவும் இல்லை. அவர் எங்களுடன் வர தயாராக இல்லை. அவர், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இருந்தும் அந்த பெண்ணை கைது செய்து மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி உள்ளோம். அந்த பெண் சாதாரண மனிதர்களை போல் நடந்து கொள்ளவில்லை. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.



Tags : Hyderabad ,Student ,actress , Hyderabad: Student arrested for threatening to kill Bollywood actress
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்