சென்னை: ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா நில மோசடியில் ஈடுபட்டதற்கான ஆடியோ ஆதாரங்கள் உள்ளன என நடிகர் சூரி தரப்பில் ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரி தன் வசமுள்ள ஆதாரங்களை காவல்துறை வசம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் அறுவுரை வழங்கியுள்ளது. நில மோசடி தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி சூரி தொடர்ந்த வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.