×

மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா : மூத்த வக்கீல் என்.ஜோதி பரபரப்பு பேட்டி

சென்னை,ஜெயலலிதா இறப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தால் சொத்து குவிப்பு வழக்கில் அவரது பெயர் இருந்திருக்காது என்று வக்கீல் ஜோதி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வழக்குகள் குறித்து அவரின் வக்கீல் என்.ஜோதி, சென்னை அண்ணா நகரில் பேட்டி அளித்தபோது கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து சுமார் 80 நாட்கள் கழித்துதான் அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில்  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு புத்தகத்தில் எந்த இடத்திலும் ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்து கூறப்படவில்லை. இறந்து போன மனிதர் மீது வழக்கு தொடர்ந்து நடத்தக்கூடாது என்பது தான் சட்ட விதி. இறந்து போன நபர் விடுதலையாகிவிட்டார் என்ற நிலையில் தான் இருக்கிறார். இறந்துபோனவர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் நீர்த்துவிடுகிறது என்பதுதான் சட்ட நிலைமை.

ஜெயலலிதா இறந்துவிட்டதை சசிகலா தரப்பு ஏன் சான்றிதழுடன் வழக்கின்போது தாக்கல் செய்யவில்லை? தாக்கல் செய்திருந்தால் அந்த வழக்கில் ஜெயலலிதா பெயர் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதிமுகவில் நான் உறுப்பினராக இல்லை. ஜெயலலிதா மீது வழக்கில் எந்த அபராதமும் இல்லை.மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவை பிணைக்கைதியாகவே வைத்திருந்தார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Jayalalithaa ,N. Jyoti ,gang ,Mannargudi ,Senior ,interview , Mannargudi, Jayalalithaa, Senior Advocate, N. Jothi
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...