காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது. இதன்காரணமாகவே மீண்டும் உயரம் கணக்கிடப்பட்டுள்ளது. இது குறித்து நாளை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.