கோவை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்செங்கோட்டில் அண்ணா சிலை அருகே விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.