சென்னை: திருவான்மியூரில் கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட மகளை காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழந்தார். கடலில் ராட்சத அலையில் சிக்கிய 11 வயது மகளை மீட்கச் சென்ற தந்தை பாலாஜி கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கடலில் தத்தளித்த சிறுமியை மீனவர்கள் மீட்ட நிலையில் தந்தை பாலாஜியின் சடலம் கரை ஒதுங்கியது.