×

முழு அடைப்பு போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு: தொமுச சண்முகம் அறிவிப்பு

சென்னை: நாளை விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு தெரிவிப்பதாக தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். இதை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் எதிர்த்துப் போராடி வருகிறார்கள். தற்பொழுது இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய அமைப்புகளும் இணைந்து வருகின்ற 8ம் தேதி பாரத் பந்த் அறிவித்துள்ளது.

பந்திற்கு மத்திய தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனை ஆதரித்து தமிழகத்தில் உள்ள தொமுச பேரவை, ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐயுடியு.ச, எம்எல்எப், டிடிஎஸ்எப், ஏஏஎல்எல்எப் ஆகிய சங்கங்கள் வருகின்ற 8ம் தேதி பந்திற்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

Tags : Trade unions ,announcement ,Tomusa Shanmugam , Trade unions support full blockade struggle: Tomusa Shanmugam announcement
× RELATED வேலை நிறுத்தம் தொடர்பாக...