×

இது விவசாயிகள் பூமி, விவசாயிகளின் குறைகளை தீர்க்காமல் இந்தியா வல்லரசாக முடியாது: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால்தான் உலக நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் டெல்லியை சுற்றி மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இனியும் அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக விவசாயிகளின் பிரச்சனையில் கவனம் செலுத்தி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இது விவசாயிகள் பூமி, விவசாயிகளின் குறைகளை தீர்க்காமல் இந்தியா வல்லரசாக முடியாது, இந்தியாவின் முதுகெலும்பே விவசாயமும் விவசாயிகளும் தான். எனவே விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்த்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


Tags : land ,peasants ,superpower ,India , This is the land of the peasants, India cannot be a superpower without resolving the grievances of the peasants: Vijayakanth Report
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...