×

போலீசார் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

புதுடெல்லி: ஸ்ரீநகரில் நடைபெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள் கூட்டத்தில் தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஸ்ரீநகரின் ஹவால் பகுதியில் உள்ள சஸ்கரிபோராவில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள் கூட்டம் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கு திடீரென வந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், காவல் துறை அதிகாரி ஒருவரும், ஸ்ரீநகரைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்தனர். ‘காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க சம்பவ இடம் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது’ என்று இச்சம்பவம் குறித்து காஷ்மீர் காவல்துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது.


Tags : Terrorists , Terrorists fire on police
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...