×

நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி

குன்னூர்: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்குறைந்து தற்போது இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சிங்கார, கரன்சி, ஆடர்லி போன்ற பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதமான கால நிலையில் இயற்கையை ரசித்தபடி தேயிலை தோட்டங்கள் மத்தியில் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படுகிறது. இதே போல ஊட்டியிலும் இதமான காலநிலை நிலவி வருவதால் தாவரவியல்பூங்கா, ரோஜா பூங்கா போன்றவற்றிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நேற்று அதிகளவில் காணப்பட்டது. கொரோன ஊரடங்கிற்கு பிறகு 2வது சீசன் முடியும் தருவாயில் சுற்றுலா பயணிகள் வருகையால் உள்ளூர் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Tags : tourist arrivals ,Nilgiris ,Merchants , Nilgiris, tourists, visitors, merchants delight
× RELATED தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின்...