×

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி: சிகிச்சைக்காக அனுமதி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

டிசம்பர் 2-ல் மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவுடன் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் மு.க.ஸ்டானினை சந்தித்தார். டிசம்பர் 3-ம் தேதி நடந்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திலும் அழகிரி பங்கேற்றார். தமிழ்நாட்டில் தற்போது கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என பலர் கொரோனா தொற்றுக்கு அவதியுற்று வருகின்றனர்.


Tags : Tamil Nadu Congress Committee , தமிழ்நாடு ,காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே.எஸ். அழகிரி,கொரோனா
× RELATED ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும்...