கடலூர்: புரெவி புயல் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. கடலூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரத்தில் அதிகபட்சமாக 34 செ.மீ. மழை கொட்டியது.