புதுடெல்லி: தேசிய அளவில் சிறப்பாகச் செயல்படும் காவல் நிலையங்களை அங்கீகரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு ஆண்டும் பல குழுக்கள் அமைக்கப்படுகிறது. அவை இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி, அதன் செயல்பாடு அடிப்படையில் சிறந்த காவல் நிலையத்தை் தேர்ந்தெடுக்கும். இதன்படி 2020 ஆண்டுக்காக இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்ததில் முதல் பத்து இடங்களை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. அதில் மணிப்பூர் காவல் நிலையம் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தேசிய அளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக அறிவித்துள்ளது. இதனால் சேலம் காவல்துறையினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.