×

ராணிப்பேட்டை பாலாற்றில் மூழ்கிய ஆட்டோ டிரைவர்: 4வது நாளாக தேடும் பணி தீவிரம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மண்டித்தெருவை சேர்ந்தவர் சரத்குமார்(22), லோடு ஆட்டோ டிரைவர். இவர் தனது நண்பர்கள் சதீஷ்குமார், கார்த்திக் ஆகியோருடன் பாலாற்றில் ஓடும் வெள்ளத்தை காண கடந்த 29ம் தேதி சென்றார். அப்போது, தரைப்பாலத்தின் ஓரத்தில் நின்றபடி வெள்ளத்தை வேடிக்கை பார்த்தபோது சரத்குமார் திடீரென தண்ணீரில் தவறிவிழுந்து மூழ்கினார். அவரை தேடும் பணியை ராணிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மேற்கொண்டனர்.

2வது நாளில் இருந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில் சரத்குமாரை நேற்று 4வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘அரக்ேகாணம் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 2 குழுக்கள் என மொத்தம் 3 குழுக்கள் பிரிந்து தனித்தனியாக பாலாற்றில் 4வது நாளாக தேடிவருகிறோம். இதுவரை சரத்குமார் கிடைக்கவில்லை. இருப்பினும், தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது’ என்றனர்.

Tags : Auto driver ,lake ,Ranipettai , Ranipet
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...